Wednesday, October 30, 2019

Naayurivi Mooligai Features and Uniqness

Dr.V.Suresh MD(AM), DHSM,DYNC, FRHS,PhD.,

தெரிந்த மூலிகை தெரியாத விஷயங்கள்.
#நாயுருவி.

அபமார்க்கி, காஞ்சரி, சரமஞ்சரி, சேகரீகம், நாயரஞ்சி, மாமுனி செந்நாயுருவி, படருருக்கி, கல்லுருவி என வேறு பெயர்களும் நாயுருவிக்கு உண்டு.
சிவப்பு நிறம், வெள்ளை நிறம் என இருவகை உண்டு.

இது, பிரசவித்த தாய்மார்களின் வயிற்று அழுக்கினை வெளியேற்றப் பயன்படும். நாயுருவி வேரை காயவைத்து, தூள் செய்து இந்தத் தூளால் பல் துலக்கி வரலாம் அல்லது பச்சை வேரை சேகரித்து, நீரில் கழுவி சுத்தம் செய்து பல் துலக்கி வர பற்கள் உறுதியடையும்.

நாயுருவி வேர்த்தூள் ½ முதல் 1 கிராம் வரை வெந்நீரில் சாப்பிட்டு வர உடல் பலமடையும். நாயுருவி வேர் அல்லது இலையைஅரைத்து பசையாக்கி, உடலில் வர பூச கொப்புளம், சிரங்கு குணமாகும்.

பற்களில் தங்கியுள்ள நுண்கிருமிகளை நீக்கி பல்சொத்தை, பற்கூச்சம், ஈறுவலி, ஈறுவீக்கம் வராமல் தடுத்து பற்களைப் பளிச்சென்ற வெண்மை நிறத்தைக் கொடுப்பது நாயுருவி மூலிகைக்கு உண்டு. நாட்பட்ட மலர்ச்சிக்கல் உடையவர்கள் நாயுருவி இலைகளை அரை லிட்டர் நீரில் கொதிக்க வைத்து காலையில் குடித்து வர பேதியாகும்.

துத்திக் கீரை வதக்கலில் நாயுருவி விதைச் சூரணம் 20 கிராம் கலந்து உணவில் சேர்துண்ண மூலம் அனைத்தும் தீரும்.
நாயுருவி வேரால் பல் துலக்கப் பல் தூய்மையாகி முக வசீகரம் உண்டாகும் மனோசக்தி அதிகமாகும், நினைத்தவை நடக்கும், ஆயுள் மிகும், காப்பி, டீ, புகை, தவிர்க்க வேண்டும். நாயுருவிச் செடியின் இலையையும், காராமணிப் பயிரையும் சம அளவு எடுத்து மைய அரைத்து நீர்க்கட்டு உள்ள இடத்தில தொப்புள் மீது பற்றிட நீர் கட்டு நீங்கி குணமாகும். நாயுருவிச்செடியின் இலையின் சாறு எடுத்து இரண்டு சொட்டு காதில் விட்டால் காதில் சீழ் வடிதல் நிற்கும்.

நாயுருவி இலைச்சாற்றை 30 மி.லி. அளவில் தினமும் காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர சிறு நீரக நோய்கள் அனைத்தும் தீரும்.
நாயுருவி இலையை 30கிராம் அத்துடன் பத்து மிளகு, சிறிது வெல்லம் சேர்த்து அரைத்துச் சாப்பிட, அனைத்து விதமான காய்ச்சல்களும் விலகும். நாயுருவி இலைச்சாறு 500 மி.லி . எடுத்துசட்டியில் இட்டு காய்ச்சி சுண்ட வைத்து, 100மி.லி நல்லெண்ணெய் சேர்த்துக் காய்ச்சி, பின்னர் இரண்டு சின்ன வெங்காயத்தையும் நறுக்கிச் சேர்த்து நன்கு வதக்கி, இரண்டு நாட்டுக் கோழி முட்டையை உடைத்துச் சேர்த்து நன்கு கிளறி, சாப்பிட வர , மூலத்தில் உண்டாகும் ரத்தக் கழிச்சலானது உடனே தீரும்.

No comments:

Post a Comment