Tuesday, October 22, 2019

Soul Seat in Human Body

Sri Aadhi Shiva Guru Vasi Yogam

Dr.Suresh
Master : Aadhi Shiva Guru Vasi Yoga

திருமூலர் சிந்தனை :
================

"திருமந்திரமும் வாழ்வியல் ரகசியங்களும்"
---------------------------------------------------------------------

"நமது உடலில் உயிர் எங்கே
இருக்கிறது ( அமர்கிறது ) விளக்கும்
திருமூலரின் திருமந்திரம்" :

நமது உடலில் உயிர் ஓடிக் கொடிருப்பதால் தான் நாம் செயல்பட முடிகிறது என்பது இன்றைய விஞ்ஞானிகளும் ஏற்றுக் கொள்ளக் கூடிய உண்மை.
இதே திருமந்திரத்தில் ஒரு தாயின் தொப்புல்கொடியில் இருந்துதான் கரு என்னும் பிண்டத்திற்கு மெல்லிய சத்ததுடன் உயிர் சென்று கருவுக்கு உயிரூட்டுகிறது என்பதை திருமூலர் கூரியுள்ளார்.
ஆனால் அவ்வாறு சென்ற உயிர் உடலில் எந்த பாகத்தில் போய் அமர்கிறது என்ற சந்தேகம் மேலோங்கும்.

அந்த சந்தேகத்தை திருமூலரே தீர்த்து வைக்கிறார்.

“உச்சிக்கு கீழே உண்ணாக்கு மேலே
வச்ச பொருளின் வகையறிவாரில்லை”
“உற்றாரும் ஆவி அமர்ந்திடம் உச்சியே” (தி.ம 309)

பொருள்:
உயிர் சென்று அமரும் இடம் தலை உச்சிக்கு கீழே உள்நாக்கிற்கு மேலே. தாயின் தொப்புள் கொடியில் இருந்து வரும் உயிர் நமது உச்சிக்கு கீழே வந்தமருகிறது.

விஞ்ஞானம்:
இன்றைய விஞ்ஞானத்தின் படி பார்த்தாலும் நமது நரம்பு மண்டலத்தின் முடிச்சி இந்த இடத்தில்தான் அமைந்துள்ளது.
நமது முதுகு தண்டுவடம் (Spinal card) இந்த இடத்தில் இருந்துதான் ஆரம்பமாகிறது.
உயிர் அமரும் இடமட்டுமல்லாமல் அதன் வடிவத்தையும் நிறத்தையும் பற்றிக் கூட நமது திருமூலர் சித்தர் கூறியிருக்கிறார்.

"நவகோடி சித்தர்கள் திருவடிகளே சரணம்"

No comments:

Post a Comment