#_அகத்தியர்_வாக்கு
#_கிருஷ்ண_அவதார_நோக்கம்
இராமாயண காலத்தில் நடந்த விஷயங்களில், மிக முக்கியமான சூழ்நிலைகளில், அகத்தியப் பெருமான், ஸ்ரீ ராமன் முன் தோன்றி அவரை சரியான பாதையில், வழி நடத்தியுள்ளார். யுத்தகாண்டத்தில், ஆதித்த்யஹ்ருதயம் என்கிற ஸ்லோகத்தை ஸ்ரீராமருக்கு உபதேசித்து அவரை ராவணனுக்கு எதிரான யுத்தத்தில். வெற்றி பெறச் செய்தார். இன்றளவும், அந்த சுலோகம் நம் உள்ளளவில் நின்று, பலரின் வாழ்க்கையிலும், அவர்களை வெற்றி பெறச் செய்கிறது என்றால், அதற்கு காரணம், அகத்தியப் பெருமான், கலியுகத்தில், நல்லவர்கள், அவர்களுக்கு ஏற்படும் துன்பத்தை வீழ்த்தி, வெற்றி பெற வேண்டும் என்று அன்றே நினைத்ததுதான்! ஆதித்யஹ்ருதயம் மந்திரத்தினுள் எத்தனை சூட்சுமமான பலம் பொருந்திய பீஜாக்ஷரங்களை அகத்தியப் பெருமான் எப்படி பொருத்தியுள்ளார், என்று தெய்வ மொழியில் தலை சிறந்த ஒருவராலேயே கண்டறிய முடியும். அதற்கும் அகத்தியப் பெருமான் அருள் வேண்டும்.
தசாவதாரங்களில் ஒன்றான கிருஷ்ணாவதாரத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் ராசலீலை நடத்தியது ஏன் என்ற கேள்வி மனிதரிடையில் இன்றும் நிலவி வருகிறது. ஒரு சிலரால் அது தவறாகவும் சித்தரிக்கப் படுகிறது. அகத்தியப் பெருமான் எப்போதும் சொல்வது போல், அவரின் ஒவ்வொரு வார்த்தைக்கும், சூட்ச்சும அர்த்தங்கள் பலதும் உண்டு. அதை கண்டுபிடித்து தெளிவடைவது என்பது மிக அரிதான விஷயம். இருந்தும், அகத்தியப் பெருமான், ஸ்ரீ கிருஷ்ணரின் ராசலீலையை பற்றி மிகத் தெளிவாக விளக்குகிறார்.
ஸ்ரீ கிருஷ்ணர் கோபிகா ஸ்திரீகளுடன், நீரிலும், நிலத்திலும், ஆடிப்பாடி அவர்களை மகிழ்வித்ததே ராசலீலை ஆகும். சாதாரண மனிதனின் கண்களுக்கு, அவர்கள் அழகு, வதனம் நிறைந்த பெண்களாகத்தான் காண முடியும். ஆனால் சர்வமும் அறிந்த பரமாத்மாவிற்கு, இது ராம அவதாரத்தின் பாக்கி, இந்த அவதாரத்தில் நிறைவு பெறுகிறது என்று உணர முடிந்தது.
த்ரேதா யுகத்தில் ராமபிரான் வனவாசம் ஏகிய பொழுது, பல ரிஷிகள், "ராமன் தன் ஆஸ்ரமம் வருவாரா? அவர் திருமேனியை, திருவடியைத் தொட்டு தழுவும் பாக்கியம் கிட்டாதா? என்று ஏங்கினர். கடும் தவத்தை மேற்கொண்டதால், அவர்கள் தங்கள் ஆஸ்ரமத்தை விட்டு வெளியே வர முடியாத நிலையும் கூட. ஸ்ரீ ராமரால் அனைத்து ரிஷிகளின் அபிலாக்ஷைகளையும் பூர்த்தி செய்ய, அனைவரின் அச்ரமங்களுக்கு செல்ல முடியாத நிலை. மிகச் சுருக்கமான முனிவர்களை, அதாவது அகத்தியர், பரத்வாஜர், சபரி போன்ற ரிஷிகளையே ஸ்ரீ ராமன் சந்திக்க முடிந்தது. அதற்குள், கிஷ்கிந்தா, சுந்தர, யுத்த காண்டங்கள் போன்றவை இடைப்பட, ஸ்ரீராம்னால், மற்ற நூற்றுக் கணக்கான ரிஷிகளை சந்திக்க இயலவில்லை. அத்தனை ரிஷிகளின் நிறைவேறாத ஆசைகளும், வாசனையாக மாறி, ஸ்ரீ ராமனை பற்றிக் கொண்டது.
யுத்த காண்டத்தில், இலக்குவன், போரில் மூர்ச்சையுற, மனம் தளர்ந்து நின்ற ஸ்ரீ ராமன் முன் ஸ்ரீ அகத்தியப் பெருமான் தோன்றி, ஸ்ரீ ராமருக்கு ஆதித்யஹ்ருதயம் என்கிற ஸ்லோகத்தை உபதேசித்து அருளினார்.
பின்னர், "ஸ்ரீ ராமா! என்னுடன் வந்திருக்கும் முனிவர்களையும், ரிஷிகளையும் வணங்குவாயாக. நீ வனவாசம் பூண்ட பொழுது பல ரிஷிகள், நின் மானுட திவ்ய ரூபத்தை தரிசனம் செய்யத் துடித்தனர். அதற்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் போகவே, அவர்களுள் தாங்கள் ஏற்ற தவ நிலைகள் முடிந்தவர்களை உன் தரிசனதிற்காக இங்கு அழைத்து வந்துள்ளேன். உன் திரு உடலை ஆலிங்கனம் செய்து, உனக்கு உடலால் சேவை செய்ய இவர்கள் உளமார விரும்புகின்றனர். அவர்களின் ஆவலை பூர்த்தி செய்வாயாக" என்றார்.
ஸ்ரீ ராமரும் அவ்வாறே இசைய அகத்தியப் பெருமான் "ஸ்ரீ ராமா! இன்னும் நூற்றுக் கணக்கான ரிஷிகள், மகரிஷிகள், வனங்களில் உன் மானுட ரூப தேகத்தை தரிசிக்க ஆவலாய் உள்ளனர். அவர்கள் இன்னும் தண்டகாரண்யத்தில் கடுந்தவத்தில் இருப்பதால் வனத்தை விட்டு வெளிவர இயலவில்லை. உன் வனவாசத்தில் அவர்களுக்குத் தரிசனம் தருவாய் என வழிமேல் விழிவைத்துக் காத்து நின்று ஏமாற்றமடைந்து விட்டனர். அவர்களுடைய அபிலாக்ஷைகளை எவ்வாறு பூர்த்தி செய்யப் போகிறாய்? உன் ராமாவதாரதிற்குள் இது சாத்தியமா? என்று வினவினார்.
அட! ஆமாம்! இந்த ராமாவதார முடிவுக்குள், அத்தனை பேர் ஆசைகளையும் என்னால் நிறைவேற்ற முடியாதே! என்று திகைத்து நின்ற ஸ்ரீராமர், அகத்தியப் பெருமானிடம் "முனி சிரேஷ்டரே! நூற்றுக்கணக்கான ரிஷிகளின் புனிதமான உள்ளம் ஏங்க நான் காரணமாகிவிட்டேனோ? இனி அவர்களை சந்திப்பது சாத்தியம் அல்லவே! தாங்கள்தான் எனக்கு நல்வழி காட்டவேண்டும்!" என்று வேண்டினார்.
அப்போது, அகத்தியர், "ஸ்ரீ ராமா! நீ சாட்சாத் நாராயணனின் திரு அவதாரம் என்பதை அவர்கள் அறிவார்கள். உனது அடுத்த அவதாரத்தில், துவாபர யுகத்தில் நீ ஸ்ரீகிருஷ்ணனாக அவதரிக்கும் பொழுது, ராமாவதாரத்தில் உன்னை கண்டு சேவை செய்ய ஏங்கிய மகரிஷிகள், உன் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் கோபிகா ஸ்த்ரீகளாய் பிறந்து உன்னுடன் தவழ்ந்து விளையாடி, அற்புதமான பக்தி பரவச நிலையை அடைவார்கள். இது அவதார இரகசியமாகும்" என்று அருளினார்.
ஆகவே, ராசலீலையில் ஸ்ரீ கிருஷ்ணன் விளையாடியது ராமாவதார மகரிஷிகளின் விருப்பங்களைப் பூர்த்தி செய்யவே ஆகும்.ராமாவதார பூர்வ ஜென்ம வாசனைகளுடன், பூர்ணாவதார மூர்த்தியான ஸ்ரீ கிருஷ்ணனை ஸ்பர்சிக்க, கோபிகா ஸ்த்ரீகளான மகரிஷிகள், இரு அவதார மூர்த்திகளின் தெயவாம்சங்களால், பக்தி பெருக்கின் உன்னத நிலையை அடையும் பேறு பெற்றனர்.
அகத்தியப் பெருமானின் அருளால் நடந்த நிகழ்ச்சிகளை உற்றுப் பார்த்தால், ஒன்று புரியும். சூட்ச்சுமம் விளங்க வேண்டும் என்றால், அதற்கு அவரின் அருள் இருந்தால்தான் முடியும். முன் சொன்னது போல், தலை முதல் பாதம் வரை புண்ணிய எண்ணங்கள் பூத்து குலுங்கம் ஒவ்வொரு அடியவருக்கும், அகத்தியப் பெருமானின் அருள் என்பது சுலபமே, அனைத்து சூட்ச்சுமமும் விளக்கப்படும், விளங்கும்.
எல்லோரும் அவர் அருள் பெற வாழ்த்துகிறேன்!
Dr.Suresh
Shiva Guru Vasi Yoga
#_கிருஷ்ண_அவதார_நோக்கம்
இராமாயண காலத்தில் நடந்த விஷயங்களில், மிக முக்கியமான சூழ்நிலைகளில், அகத்தியப் பெருமான், ஸ்ரீ ராமன் முன் தோன்றி அவரை சரியான பாதையில், வழி நடத்தியுள்ளார். யுத்தகாண்டத்தில், ஆதித்த்யஹ்ருதயம் என்கிற ஸ்லோகத்தை ஸ்ரீராமருக்கு உபதேசித்து அவரை ராவணனுக்கு எதிரான யுத்தத்தில். வெற்றி பெறச் செய்தார். இன்றளவும், அந்த சுலோகம் நம் உள்ளளவில் நின்று, பலரின் வாழ்க்கையிலும், அவர்களை வெற்றி பெறச் செய்கிறது என்றால், அதற்கு காரணம், அகத்தியப் பெருமான், கலியுகத்தில், நல்லவர்கள், அவர்களுக்கு ஏற்படும் துன்பத்தை வீழ்த்தி, வெற்றி பெற வேண்டும் என்று அன்றே நினைத்ததுதான்! ஆதித்யஹ்ருதயம் மந்திரத்தினுள் எத்தனை சூட்சுமமான பலம் பொருந்திய பீஜாக்ஷரங்களை அகத்தியப் பெருமான் எப்படி பொருத்தியுள்ளார், என்று தெய்வ மொழியில் தலை சிறந்த ஒருவராலேயே கண்டறிய முடியும். அதற்கும் அகத்தியப் பெருமான் அருள் வேண்டும்.
தசாவதாரங்களில் ஒன்றான கிருஷ்ணாவதாரத்தில், ஸ்ரீ கிருஷ்ணர் ராசலீலை நடத்தியது ஏன் என்ற கேள்வி மனிதரிடையில் இன்றும் நிலவி வருகிறது. ஒரு சிலரால் அது தவறாகவும் சித்தரிக்கப் படுகிறது. அகத்தியப் பெருமான் எப்போதும் சொல்வது போல், அவரின் ஒவ்வொரு வார்த்தைக்கும், சூட்ச்சும அர்த்தங்கள் பலதும் உண்டு. அதை கண்டுபிடித்து தெளிவடைவது என்பது மிக அரிதான விஷயம். இருந்தும், அகத்தியப் பெருமான், ஸ்ரீ கிருஷ்ணரின் ராசலீலையை பற்றி மிகத் தெளிவாக விளக்குகிறார்.
ஸ்ரீ கிருஷ்ணர் கோபிகா ஸ்திரீகளுடன், நீரிலும், நிலத்திலும், ஆடிப்பாடி அவர்களை மகிழ்வித்ததே ராசலீலை ஆகும். சாதாரண மனிதனின் கண்களுக்கு, அவர்கள் அழகு, வதனம் நிறைந்த பெண்களாகத்தான் காண முடியும். ஆனால் சர்வமும் அறிந்த பரமாத்மாவிற்கு, இது ராம அவதாரத்தின் பாக்கி, இந்த அவதாரத்தில் நிறைவு பெறுகிறது என்று உணர முடிந்தது.
த்ரேதா யுகத்தில் ராமபிரான் வனவாசம் ஏகிய பொழுது, பல ரிஷிகள், "ராமன் தன் ஆஸ்ரமம் வருவாரா? அவர் திருமேனியை, திருவடியைத் தொட்டு தழுவும் பாக்கியம் கிட்டாதா? என்று ஏங்கினர். கடும் தவத்தை மேற்கொண்டதால், அவர்கள் தங்கள் ஆஸ்ரமத்தை விட்டு வெளியே வர முடியாத நிலையும் கூட. ஸ்ரீ ராமரால் அனைத்து ரிஷிகளின் அபிலாக்ஷைகளையும் பூர்த்தி செய்ய, அனைவரின் அச்ரமங்களுக்கு செல்ல முடியாத நிலை. மிகச் சுருக்கமான முனிவர்களை, அதாவது அகத்தியர், பரத்வாஜர், சபரி போன்ற ரிஷிகளையே ஸ்ரீ ராமன் சந்திக்க முடிந்தது. அதற்குள், கிஷ்கிந்தா, சுந்தர, யுத்த காண்டங்கள் போன்றவை இடைப்பட, ஸ்ரீராம்னால், மற்ற நூற்றுக் கணக்கான ரிஷிகளை சந்திக்க இயலவில்லை. அத்தனை ரிஷிகளின் நிறைவேறாத ஆசைகளும், வாசனையாக மாறி, ஸ்ரீ ராமனை பற்றிக் கொண்டது.
யுத்த காண்டத்தில், இலக்குவன், போரில் மூர்ச்சையுற, மனம் தளர்ந்து நின்ற ஸ்ரீ ராமன் முன் ஸ்ரீ அகத்தியப் பெருமான் தோன்றி, ஸ்ரீ ராமருக்கு ஆதித்யஹ்ருதயம் என்கிற ஸ்லோகத்தை உபதேசித்து அருளினார்.
பின்னர், "ஸ்ரீ ராமா! என்னுடன் வந்திருக்கும் முனிவர்களையும், ரிஷிகளையும் வணங்குவாயாக. நீ வனவாசம் பூண்ட பொழுது பல ரிஷிகள், நின் மானுட திவ்ய ரூபத்தை தரிசனம் செய்யத் துடித்தனர். அதற்கு சந்தர்ப்பம் கிடைக்காமல் போகவே, அவர்களுள் தாங்கள் ஏற்ற தவ நிலைகள் முடிந்தவர்களை உன் தரிசனதிற்காக இங்கு அழைத்து வந்துள்ளேன். உன் திரு உடலை ஆலிங்கனம் செய்து, உனக்கு உடலால் சேவை செய்ய இவர்கள் உளமார விரும்புகின்றனர். அவர்களின் ஆவலை பூர்த்தி செய்வாயாக" என்றார்.
ஸ்ரீ ராமரும் அவ்வாறே இசைய அகத்தியப் பெருமான் "ஸ்ரீ ராமா! இன்னும் நூற்றுக் கணக்கான ரிஷிகள், மகரிஷிகள், வனங்களில் உன் மானுட ரூப தேகத்தை தரிசிக்க ஆவலாய் உள்ளனர். அவர்கள் இன்னும் தண்டகாரண்யத்தில் கடுந்தவத்தில் இருப்பதால் வனத்தை விட்டு வெளிவர இயலவில்லை. உன் வனவாசத்தில் அவர்களுக்குத் தரிசனம் தருவாய் என வழிமேல் விழிவைத்துக் காத்து நின்று ஏமாற்றமடைந்து விட்டனர். அவர்களுடைய அபிலாக்ஷைகளை எவ்வாறு பூர்த்தி செய்யப் போகிறாய்? உன் ராமாவதாரதிற்குள் இது சாத்தியமா? என்று வினவினார்.
அட! ஆமாம்! இந்த ராமாவதார முடிவுக்குள், அத்தனை பேர் ஆசைகளையும் என்னால் நிறைவேற்ற முடியாதே! என்று திகைத்து நின்ற ஸ்ரீராமர், அகத்தியப் பெருமானிடம் "முனி சிரேஷ்டரே! நூற்றுக்கணக்கான ரிஷிகளின் புனிதமான உள்ளம் ஏங்க நான் காரணமாகிவிட்டேனோ? இனி அவர்களை சந்திப்பது சாத்தியம் அல்லவே! தாங்கள்தான் எனக்கு நல்வழி காட்டவேண்டும்!" என்று வேண்டினார்.
அப்போது, அகத்தியர், "ஸ்ரீ ராமா! நீ சாட்சாத் நாராயணனின் திரு அவதாரம் என்பதை அவர்கள் அறிவார்கள். உனது அடுத்த அவதாரத்தில், துவாபர யுகத்தில் நீ ஸ்ரீகிருஷ்ணனாக அவதரிக்கும் பொழுது, ராமாவதாரத்தில் உன்னை கண்டு சேவை செய்ய ஏங்கிய மகரிஷிகள், உன் ஸ்ரீ கிருஷ்ணாவதாரத்தில் கோபிகா ஸ்த்ரீகளாய் பிறந்து உன்னுடன் தவழ்ந்து விளையாடி, அற்புதமான பக்தி பரவச நிலையை அடைவார்கள். இது அவதார இரகசியமாகும்" என்று அருளினார்.
ஆகவே, ராசலீலையில் ஸ்ரீ கிருஷ்ணன் விளையாடியது ராமாவதார மகரிஷிகளின் விருப்பங்களைப் பூர்த்தி செய்யவே ஆகும்.ராமாவதார பூர்வ ஜென்ம வாசனைகளுடன், பூர்ணாவதார மூர்த்தியான ஸ்ரீ கிருஷ்ணனை ஸ்பர்சிக்க, கோபிகா ஸ்த்ரீகளான மகரிஷிகள், இரு அவதார மூர்த்திகளின் தெயவாம்சங்களால், பக்தி பெருக்கின் உன்னத நிலையை அடையும் பேறு பெற்றனர்.
அகத்தியப் பெருமானின் அருளால் நடந்த நிகழ்ச்சிகளை உற்றுப் பார்த்தால், ஒன்று புரியும். சூட்ச்சுமம் விளங்க வேண்டும் என்றால், அதற்கு அவரின் அருள் இருந்தால்தான் முடியும். முன் சொன்னது போல், தலை முதல் பாதம் வரை புண்ணிய எண்ணங்கள் பூத்து குலுங்கம் ஒவ்வொரு அடியவருக்கும், அகத்தியப் பெருமானின் அருள் என்பது சுலபமே, அனைத்து சூட்ச்சுமமும் விளக்கப்படும், விளங்கும்.
எல்லோரும் அவர் அருள் பெற வாழ்த்துகிறேன்!
Dr.Suresh
Shiva Guru Vasi Yoga

No comments:
Post a Comment